Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பேச்சு பேசுபவர் வைகோ - பிரேமலதா கடும் தாக்கு

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பேச்சு பேசுபவர் வைகோ - பிரேமலதா கடும் தாக்கு

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பேச்சு பேசுபவர் வைகோ - பிரேமலதா கடும் தாக்கு
, ஞாயிறு, 6 நவம்பர் 2016 (12:24 IST)
நாளுக்கொரு பேச்சு பேசுபவர் வைகோ என்று விஜயகாந்த் பிரேமலதா கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
சமீபத்தில் ஒரு வார இதழுக்கு பேட்ட்டியளித்த வைகோ “அரசியலில் முட்டாள்தனமான முடிவுகள் எடுத்திருக்கிறேன். அதைச் சொல்வதில் தவறில்லை. நான் எடுத்த முடிவுகளில் மிகத் தவறான முடிவு ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்தது. 
 
என்னை சிறையில் வைத்த ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்ததால் என் கிரிடிபிலிட்டி நொறுங்கி போய்விட்டது. நம்பகத்தன்மை தரைமட்டமாயிடுச்சு! விஜயகாந்தை முதல்வராக ஏற்றுக்கொண்டதால் என் இமேஜ் போய்விட்டது உண்மை" என்று கூறினார்.
 
அவரின் கருத்து விஜயகாந்தையும், தேமுதிக தொண்டர்களை கோபத்திற்கு ஆளாக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் இதுபற்றி கருத்து தெரிவித்த பிரேமலதா விஜயகாந்த் “நாள்தோறும் ஒரு கருத்தை கூறிவருபவர் வைகோ. அவர்தான் தேமுதிகவை கூட்டணிக்கு அழைத்தார். எனவே இதுபற்றி அவரிடம்தான் கேட்க வேண்டும்” என்று கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் : மயிர் இழையில் உயிர் தப்பிய டிரம்ப் (வீடியோ)