Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேசிய பூங்காவில் நுழைய பெண்களுக்கு அனுமதி இல்லை: அமைச்சரின் அதிரடி அறிவிப்பு..!

Webdunia
திங்கள், 28 ஆகஸ்ட் 2023 (14:02 IST)
ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள தேசிய பூங்காவில் நுழைய பெண்களுக்கு அனுமதி இல்லை என அந்நாட்டு அமைச்சர் முகமது காலெத் என்பவர் அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசு நடந்து வரும் நிலையில் அங்கு பெண்களுக்கு ஒவ்வொரு உரிமையாக பறிபோய் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
பெண்கள் கல்லூரிகளில் சென்று படிக்க கூடாது என்றும் பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது என்றும் பெண்கள் விளையாட்டு துறையில் ஈடுபடக்கூடாது என்றும் புதுப்புது சட்டங்கள் இயற்றப்பட்டு வருகின்றன. 
 
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள தேசிய பூங்காவிற்குள் நுழைய பெண்களுக்கு அனுமதி இல்லை என அமைச்சர் முகமது காலெத் என்பவர் கூறியுள்ளார். 
 
பெண்கள் சுற்றுலா தளங்களை காண்பது தேவையற்ற ஒன்று என்றும் இது போன்ற இடங்களுக்கு பெண்கள் வரும்போது அவர்கள் முறையாக ஹிஜாப் அணிந்து வருவதில்லை என்றும் எனவே பெண்களை பூங்காவின் நுழைவாயிலில் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

யாருமில்லா காட்டுக்குள்ள யாருக்குய்யா பாலம் கட்றீங்க? - ட்ரோல் மெட்டீரியல் ஆன உ.பி கண்ணாடி பாலம்!

வட்டார போக்குவரத்து அலுவலர், ஆசிரியை மனைவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை.. என்ன காரணம்?

பால் கேன்களில் எச்சில் துப்பி விநியோகம் செய்த பால்காரர்.. சிசிடிவி ஆதாரத்தால் கைது!

பாதி வழியிலேயே ரிப்பேர் ஆகும் சென்னை மின்சார பேருந்து? பயணிகள் அவதி!

அடுத்த கட்டுரையில்
Show comments