Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே புழுக்கமா இருக்கே; அதுக்கு விமான இறக்கையில நடக்கணுமா? – பகீர் கிளப்பிய பெண்!

Webdunia
புதன், 2 செப்டம்பர் 2020 (13:02 IST)
விமானத்திற்குள் வெப்பமாக இருப்பதாக கூறிய பெண் கதவை திறந்து சென்று விமான இறக்கையில் நடந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விடுமுறை நாளில் துருக்கி சென்று விட்டு தன் இரண்டு குழந்தைகளுடன் உக்ரைன் வழியாக விமானத்தில் சொந்த நாட்டுக்கு திரும்பியுள்ளார் பெண் ஒருவர். அவர் விமானத்தில் துருக்கியிலிருந்து கிளம்பியதிலிருந்தே விமானத்தில் மிகவும் வெப்பமாக இருப்பதாகவும், காற்று வீசவில்லை என்றும் புகார் அளித்து வந்துள்ளார்.

ஆனால் அதை யாரும் பொருட்படுத்தாத நிலையில் விமானம் உக்ரைனின் கிவ் விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. அப்போது எதிர்பாரத விதமாக அவசர கால கதவை திறந்த அந்த பெண் விமானத்தின் இறக்கை மீது வாக்கிங் சென்றிருக்கிறார். பிறகு சாவகாசமாக மீண்டும் அவசர கால கதவு வழியாக தனது இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் உக்ரைன் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த பெண்ணின் அத்துமீறிய செயல்பாட்டின் மீது நடவடிக்கை எடுத்துள்ள உக்ரைன் விமான நிலையம் உக்ரைன் வழியாக பயணிக்கும் எந்த விமானத்திலும் பறக்க அந்த பெண்ணுக்கு தடை விதித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னால் தான் அவருக்கு பதவி போச்சு.. அவர் தான் ரியல் கிங்மேக்கர்.. ரஜினி சொன்னது யாரை?

இந்தியாவுக்கு நாடு கடத்தப்படும் தஹாவூர் ராணா.. 2 சிறைகளில் சிறப்பு ஏற்பாடுகள்..!

போதும் நீட் எதிர்ப்பு சுயநல நாடகம்.. பசங்களை படிக்க விடுங்க முதல்வரே! - பாஜக அண்ணாமலை!

வீடு, வாகனக் கடன்கள் வாங்கியுள்ளீர்களா? RBI அறிவித்த அசத்தல் அறிவிப்பு..!

மகளுக்கு நிச்சயமான மாப்பிள்ளையுடன் ஓடிப்போன மாமியார்.. உபியில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments