Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிங்கம், புலி, நாய்: வைரலாகும் புகைப்படங்கள்

Webdunia
திங்கள், 27 ஆகஸ்ட் 2018 (21:31 IST)
நினைத்து பார்க்கமுடியாத விலங்குகள் பெய்ஜிங்கிலுள்ள மிருகக்காட்சி சாலையில் ஒன்றாக ஓடி விளையாடும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
 
சில நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்களில் நாய்க்குட்டி ஒன்று சிங்கம் மற்றும் புலிக்குட்டிகளுடன் சேர்ந்து விளையாடுகிறது.
 
சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கிலுள்ள மிருகக்காட்சி சாலையில் தாயால் கைவிடப்பட்ட சைபிரிய புலி, வெள்ளை புலி, கழுத்தைப் புலி மற்றும் ஆஃப்பிக்க சிங்கம் போன்றவை அங்குள்ள நாய்க்குட்டிகளின் தாயால் பாலூட்டப்பட்டு வளர்க்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேற்குறிப்பிடப்பட்ட விலங்குகளும் நாய்குட்டிகளும் ஒன்றாகவே வளர்ந்ததாகவும், அவை தற்போது நெருங்கிய நண்பர்களாகி விட்டதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 
கரடிகள், கங்காருக்கள், குரங்குகள் போன்ற கைவிடப்பட்ட பல்வேறு விலங்கினங்களை வளர்த்துள்ளதாக பெய்ஜிங் வைல்டு லைப் பார்க் தெரிவித்துள்ளது. 
 
புலி, சிங்கக்குட்டிகளுடன் நாய்க்குட்டி விளையாடும் புகைப்படங்கள் ட்விட்டரில் வைரலாகி பல்லாயிரக்கணக்கான முறை பகிரப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments