Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்மல்லையா அப்பீல்: இந்தியா அழைத்து வருவதில் சிக்கலா?

Webdunia
செவ்வாய், 5 பிப்ரவரி 2019 (06:57 IST)
இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்ற தொழிலதிபர் விஜய்மல்லையா, கடனை திரும்ப செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பியோடிவிட்டார். அவரை இந்தியா அழைத்து வர மத்திய அரசு சட்டரீதியாக எடுத்த முயற்சியின் அடிப்படையில் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தலாம் என  கடந்த ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இங்கிலாந்து நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து மல்லையா மேல் முறையீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

விஜய் மல்லையாவை நாடு கடத்த அந்நாட்டின் உள்துறை அமைச்சகத்துக்கு நீதிமன்றம் பரிந்துரை செய்திருந்த நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவின்படி விஜய்மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க, இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் தற்போது நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் முயற்சியில் விஜய்மல்லையா உள்ளார்.

இதுகுறித்து விஜய்மல்லையா தனது டுவிட்டர் பக்கத்தில் டிசம்பர் 10ஆம் தேதி என்னை இந்தியாவிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் உள்துறை அமைச்சகத்தின் நடவடிக்கையை அடுத்து தற்போது அப்பீல் செய்யவுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார். விஜய்மல்லையா மேல்முறையீடு செய்தால் அவரை இந்தியா அழைத்து வருவதில் காலதாமதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டர் .! இந்த வினோத சம்பவம் எங்கு தெரியுமா.?

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு.! அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!!

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

அடுத்த கட்டுரையில்
Show comments