Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போர் எதிரொலி: 40 ஆண்டுகளுக்கு பிறகு ஐ.நா. அவசர கூட்டத்தில் இவர்கள்..!

Webdunia
திங்கள், 28 பிப்ரவரி 2022 (10:25 IST)
சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு ஐ.நா. பொது சபையின் அவசர கூட்டத்திற்கு பாதுகாப்பு கவுன்சில் அழைப்பு விடுத்துள்ளது.

 
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த 5 நாட்களாக கடும் போர் நடைபெற்று வரும் நிலையில் இன்று ஐநா சபையின் அவசர கூட்டம் கூட்டம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போது தாக்குதல் தொடர்பாக விவாதம் செய்ய ஐநா சபையின் அவசர கூட்டம் இன்று நடைபெற உள்ளது. 
 
உக்ரைன் மீது தொடர் தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் முக்கிய முடிவுகள் இன்று எடுக்கப்பட்ட வாய்ப்பு இருப்பதாக ஐநா சபையின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் அவசர பொதுக்குழு கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு 193 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுக்கு ஐ.நா. பொது செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார். சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு ஐ.நா. பொது சபையின் அவசர கூட்டத்திற்கு பாதுகாப்பு கவுன்சில் அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 
80-க்கும் மேற்பட்ட நாடுகள் உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல்களுக்கு எதிரான நிலைப்பாட்டினை கொண்டு இருப்பதால், கடந்த முறை போல இல்லாமல் இந்த கூட்டத்தில் ரஷ்யாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட அதிக வாய்ப்பு உள்ளது என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அடுத்த கட்டுரையில்
Show comments