Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெரு நாய்கள் கருணை கொலை செய்யப்படுகிறதா? நாடாளுமன்றத்தில் நிறைவேறிய மசோதா..!

Siva
வெள்ளி, 31 மே 2024 (09:33 IST)
துருக்கியில் வீதியில் 40 லட்சம் தெரு நாய்கள் உலாவி வரும் நிலையில் அந்த நாய்களை அப்புறப்படுத்த நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெரு நாய்கள் குறுக்கே வருவதால் ஏற்படும் விபத்துக்கள், தெரு நாய் கடிக்கு ஆளாகும் மனிதர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண துருக்கி நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.

துருக்கியில் சுமார் 40 லட்சம் தெரு நாய்கள் வீதிகளில் உலா வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், தெரு நாய்களை தத்தெடுக்கும் முறையை ஊக்குவிக்க தாங்கள் மசோதா கொண்டு வர இருப்பதாக ஆளும் கட்சி கூறுகிறது.

அதே நேரத்தில் தெரு நாய்களை கருணை கொலை செய்ய வேண்டும் என்று ஒருசிலர் கூறி வந்தாலும் பெரும்பாலான மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் வெறும் 2.7 சதவீதம் பேர் மட்டுமே தெருநாய்களை கருணை கொலை செய்ய ஆதரவாக வாக்களித்திருக்கிறார்கள். எனவே தான் தெரு நாய்களை தத்தெடுக்கும் முறையை ஊக்குவிக்க மசோதா நிறைவேற்றப்பட உள்ளது.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தனது எக்ஸ் தளத்தில் துணை முதலமைச்சர் என மாற்றிய உதயநிதி..!!

உதயநிதி கலந்து கொண்ட அத்தனை தேர்தலிலும் திமுகவிற்கு வெற்றி.! ஆர்.எஸ்.பாரதி..

ஆன்லைன் ரம்மியில் லட்சக்கணக்கில் நஷ்டம்.. துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை..!

'ஆம்லெட்டில் கரப்பான் பூச்சி' - அடுத்த சர்ச்சையில் சிக்கிய ஏர் இந்தியா விமானம்..!!

'ஹிஸ்புல்லா தலைவர் உயிரிழந்தால் மெகபூபாவுக்கு ஏன் வலிக்கிறது? - பாஜக கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments