Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருப்பின மக்கள் மிகவும் மோசமானவர்கள்.. அமெரிக்க அதிபர் சர்ச்சை பேச்சு

Webdunia
திங்கள், 29 ஜூலை 2019 (10:47 IST)
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அமெரிக்காவின் பால்டிமோர் நகர மக்களை குறித்து பேசிய கருத்து, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஜனாதிபதியாக பொறுப்பேற்றதிலிருந்து பழங்குடியினர் மற்றும் அமெரிக்காவில் குடியேறிய வெளிநாட்டை பூர்வீகமாக கொண்டவர்கள் குறித்து பல சர்ச்சை கருத்துகளை பேசிவருகிறார். இந்நிலையில் தற்போது அமெரிக்காவின் பால்டிமோர் நகர மக்களை குறித்து நிறவெறியை தூண்டுவது போல், தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பகிர்ந்துள்ளார்.

அந்த டிவிட்டர் பக்கத்தில், ” பால்டிமோர் நகரம், எலிகளால் கொறிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் சிதறிக் கிடக்கும் அருவருப்பான நகரம், மனிதர்கள் யாரும் அங்கு வசிப்பதற்கு விரும்ப மாட்டார்கள், அது மோசமான நகரம்” என்று கூறியுள்ளார். மேலும் மெக்சிகோ எல்லையில் இருக்கும் அகதிகளை காட்டிலும் பால்டிமோர் மக்கள் மோசமானவர்கள்” என்றும் கடுமையான சொற்களை பயன்படுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நல்ல மார்க் எடுக்கல.. விரும்பிய பாடம் கிடைக்கல! – விரக்தியில் 10ம் வகுப்பு மாணவர் எடுத்த சோக முடிவு!

தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை..! சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை.! எந்தெந்த இடங்கள் தெரியுமா.?

வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..! விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments