Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டைய கிழிச்சிட்டு ரோட்ல போனாருல... எல்லாம் பதவி வெறி: ஸ்டாலினை விளாசிய எடப்பாடி!

Webdunia
திங்கள், 29 ஜூலை 2019 (09:30 IST)
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு முதல்வர் பதவி மீது வெறி என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 
 
வேலூர் மக்களவைத் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. திமுக மற்றும் அதிமுக ஆகிய இருக் கட்சிகளின் முக்கியத் தலைவர்களும் வேலூரில் முகாமிட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர். 
 
அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ சி சண்முகத்துக்கு ஆதரவாக தரவாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கே.வி.குப்பம் பகுதியில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார். 
எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது, முதல்வர் நாற்காலி மீது ஸ்டாலினுக்கு அவ்வளவு வெறி. வீதியில் சட்டையை கிளித்துக்கொண்டு சென்றால் என்ன நினைப்பீர்கள். உதயநிதிக்கு சட்டப்பேரவையில் புகழ்பாடுகின்றனர். 
 
குடும்பத்திற்காக பாடுபடும் கட்சி திமுக, தொண்டர்களால் உருவான குடும்பக் கட்சி அதிமுக, குடும்பத்தில் இருப்பவர்களால் ஆன கட்சி திமுக. இப்போது கூட வேலூர் தொகுதியில் திமுக சார்ப்பில் போட்டியிடுவது யார் வாரிசுதானே.. 
 
அதிமுக ஆட்சியை கவிழ்க்க திமுக முயற்சி செய்தது. ஆனால் அது நடக்கவில்லை. அதிமுகவின் தொண்டனை கூட தொட்டுப்பார்க்க முடியாது. ஒரு காலத்திலும் அதிமுக அரசை வீழ்த்தவோ, கவிழ்க்கவோ, கட்சியை உடைக்கவோ முடியாது என பேசினார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக வேட்பாளர்களாக முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்.. களை கட்டும் தேர்தல்..!

ஹனிமூன் சென்ற தம்பதி மாயம்! கணவன் சடலம் பள்ளத்தாக்கில்.. மனைவி எங்கே? - மேகாலயாவில் அதிர்ச்சி சம்பவம்!

அல்லு அர்ஜுனைக் கைது செய்தீர்களே?... இப்போ விராட் கோலியை கைது செய்வீர்களா?- ரசிகர்கள் கொந்தளிப்பு!

ராணுவம் பற்றி அவதூறாகப் பேசுவது பேச்சு சுதந்திரமா? ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கண்டனம்..!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments