Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேபாளத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து.! இந்தியர்கள் 14 பேர் பலி..!!

Senthil Velan
வெள்ளி, 23 ஆகஸ்ட் 2024 (15:00 IST)
நேபாளத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இந்தியர்கள் 14 பேர் பலியானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

உத்தரப் பிரதேச மாநில பதிவெண் கொண்ட பேருந்து ஒன்று (UP FT 7623) நேபாளத்தின் பிரபல சுற்றுலா தலமான பொக்காரா நகரில் இருந்து தலைநகர் காத்மாண்டு நோக்கி இன்று  பயணித்து கொண்டிருந்தது.
 
தனாஹுன் மாவட்டத்துக்குட்பட்ட ஐனா பஹாரா என்ற இடத்தில் பயணித்து கொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மர்சங்டி ஆற்றில் தலைக்கீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவத்தை நேபாள காவல் துறை உறுதி செய்துள்ளது. இந்த விபத்தில், 14 பேர் பலியானதாகவும், 16 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

ALSO READ: துபாய் - ஸ்பெயின் பயணம் தோல்வி.! அமெரிக்கா செல்வதால் என்ன பயன்.? ஸ்டாலினுக்கு அன்புமணி கேள்வி..!!

நேபாள நாட்டின் பேரிடர் மேலாண்மை பயிற்சி மையத்தைச் சேர்ந்த 45 பேர் கொண்ட ஆயுதப்படை காவலர்கள் குழு மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments