Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய புரோக்கர்.. ஐதராபாத்தில் கைது..!

Siva
வெள்ளி, 23 ஆகஸ்ட் 2024 (14:57 IST)
சென்னை பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய புரோக்கர் ஐதராபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய குற்றத்திற்காக ரவுடி கருக்கா வினோத் கைது செய்யப்பட்ட போது அவருடைய நட்பு வட்டாரத்தில் இருந்த நதியா என்ற பெண், சென்னை  பள்ளி மாணவிகளை மூளைச்சலவை செய்து பாலியல் தொழிலுக்கு தள்ளிய ஆதாரங்கள் என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு கிடைத்தது.

இந்த தகவல்களை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு என்.ஐ.ஏ அதிகாரிகள் அனுப்பிய நிலையில் மத்திய குற்றப்பிரிவில் செயல்படும் விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் இதுகுறித்து விசாரணையை தொடங்கினர்.

விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியான நிலையில் சென்னையை சேர்ந்த நதியா என்பவர் தான் சிறுமிகளை பாலியல் தொழிலுக்கு தள்ளியது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் நதியா அவருடைய கூட்டாளிகள் உள்பட 10 பேரை போலீசார்  கடந்த ஜூன் மாதம் கைது செய்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி ஆன சஞ்சய் குமார் என்ற புரோக்கரை போலீசார் தேடி வந்த சில நிலையில் அவரும் தற்போது ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

ALSO READ: கலைஞர் எனும் தாய் நூல் வெளியீட்டு விழா.. முதல்வர் ஸ்டாலின் - ரஜினிகாந்த் பங்கேற்பு..!

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்