Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவியை வெட்டிக் கொன்று சமைத்த கொடூர கணவன்

Webdunia
புதன், 24 ஜனவரி 2018 (08:29 IST)
மெக்சிகோவில் மனைவியை கொடூரமாக கொலை செய்து, அவரை சமையல் செய்து சாப்பிட்ட கணவனை போலீஸார் தேடி வருகின்றனர்.
மெக்சிகோவில் கடந்த சில வருடங்களாக பெண்களுக்கு பாதுகாப்பு இருப்பதில்லை. ஆங்காங்கே பெண்கள் கொடூர தாக்குதல்களுக்கும், கொலை நிகழ்வுகளுக்கும் ஆளாக்கப்படுகிறார்கள்.
 
இந்நிலையில் மெக்சிகோவின் டேக்சோ பகுதியைச் சேர்ந்தவர் மேக்டலினா(28). இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில், கணவன் மற்றும் குழந்தைகளைப் பிரிந்து தனது இரண்டாவது கணவனுடன் வாழ்ந்து வருகிறார். அவரது இரு குழந்தைகளும் முதல் கணவரின் பராமரிப்பில் வளர்ந்து வருகின்றனர்.
 
இதனையடுத்து கடந்த வாரம் தனது குழந்தைகளைப் பார்ப்பதற்காக, மேக்டலினா தனது முதல் கணவர் வீட்டிற்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் மேக்டலினா வீடு திரும்பாததால், அவரது இரண்டாவது கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீஸார் மேக்டலினாவின் முதல் கணவர் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். அங்கு அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தார். மேலும் அவரது உடல் பாகங்கள் சமைக்கப்பட்டிருந்தன. அவரது சில உடல் பாகங்கள் பிரிட்ஜில் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீஸார், தலைமறைவான மேக்டலினாவின் முதல் கணவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments