Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தன்பாலின திருமணத்துக்கு அனுமதி அளித்த முதல் தென்கிழக்கு ஆசிய நாடு.. மசோதா நிறைவேற்றம்..!

Mahendran
புதன், 19 ஜூன் 2024 (11:30 IST)
பல மேற்கத்திய நாடுகளில் தன்பாலின திருமணத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது முதன்முதலாக ஒரு தென்கிழக்கு ஆசிய நாட்டில் தன்பாலின திருமணத்திற்கு அனுமதி அளிக்கும் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 
தாய்லாந்து நாட்டில் தன்பாலின திருமணத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான சட்ட மசோதா aந்நாட்டின் மேல்சபை உறுப்பினர்கள் மன்றத்தில் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளன
 
இந்த மசோதா நிறைவேற சமூக ஆர்வலர்கள் அரசியல் தலைவர்கள் உள்பட பலர் இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்த 120 நாட்களில் இந்த மசோதா அரசிதழில் முறைப்படி இடம்பெறும் என்றும் அதன் பின்னர் தாய்லாந்தில் தன்பாலின திருமணம் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
 
இது குறித்த மசோதா வெளியான தகவலின் காரணமாக தன்பாலின் ஆர்வலர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர். மேலும் இது வரலாற்று சிறப்புமிக்க தருணம் என்றும் அவர்கள் கூறி வருகின்றனர்.
 
உலகின் பிரபலமான சுற்றுலா தளங்களில் ஒன்றாக கருதப்படும் தாய்லாந்து நாட்டில் தன்பாலின திருமணத்திற்கு அனுமதி அளித்ததற்கு ஒரு சிலர் கண்டனமும் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்