Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊட்டி தொட்டபெட்டா செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை.. என்ன காரணம்?

Mahendran
புதன், 19 ஜூன் 2024 (10:56 IST)
ஊட்டி செல்லும் சுற்றுலா பயணிகள் தவறாமல் தொட்டபெட்டா சிகரத்திற்கு சென்று அங்கு உள்ள இயற்கை காட்சிகளை ரசித்து வரும் நிலையில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு தொட்டபெட்டா சிகரத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்து வனத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது சுற்றுலா பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
 
தமிழ்நாடு வனத்துறை சார்பில் ஊட்டி வடக்கு வனச்சரகம் மற்றும் தொட்டபெட்டா சிகரம் செல்லும் பகுதியில் நுழைவுச்சீட்டு வழங்கும் கட்டிடத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
 
மேலும் அந்த பகுதியில் நிலத்தடி கேபிள் பதிக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த பராமரிப்பு பணிகள் இறுதி கட்டத்தில் இருப்பதால் தொட்டபெட்டா சிகரம் செல்லும் சாலை இன்று முதல் மூன்று நாட்களுக்கு அதாவது ஜூன் 21 வரை தற்காலிகமாக மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தொட்டபெட்டா சிகரத்துக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகனங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டிருப்பதால் சுற்றுலா பயணிகள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிக்கன் பிரியாணி சாப்பிட்ட தம்பியுடன் தகராறு.. 16 வயது அண்ணன் தூக்கில் தொங்கி தற்கொலை..!

மணமகள் தேடி தரவில்லை.. மேட்ரிமோனியல் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்த இளைஞர்..!

அடுத்த 2 மணி நேரத்தில் 2 மாவட்டங்களில் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

பிரதமர் மோடி தியானம் எதிரொலி: விவேகானந்தர் நினைவிடத்திற்கு குவியும் சுற்றுலா பயணிகள்..!

ஜூன் மாதம் இப்படி நடந்ததே இல்லை.. சென்னை மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments