Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 34 போலீசார் பலி

Webdunia
வெள்ளி, 11 மே 2018 (19:15 IST)
ஆப்கானிஸ்தானில் உள்ள பராக் நகரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 34 போலீசார் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
 
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் உச்சத்தில் உள்ளது. இவர்கள் அங்குள்ள பகுதிகள் சிலவற்றை ஆக்கிரமித்து தங்களுக்கு என்றே ஒரு போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகின்றனர்.
 
இந்த தீவிரவாதிகள் நேற்றிரவு பராக் மாகாணத்தில் அருகில் உள்ள பாலபுலுக் மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடிகள் மற்றும் காவல்நிலையத்தின் மீது பயங்கர தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 23 போலீசார் கொடூரமாக கொல்லப்பட்டனர். அதன்பின்னர் பயங்கரவாதிகள் பராக் நகருக்குள் புகுந்து 11 போலீசாரை கொன்று அவர்களிடம் இருந்து ஆயுதங்களை கைப்பற்றி சென்றுள்ளனர்.

 
 
தலிபான்கள் நடத்திய இந்த தாக்குதலில் 34 போலீசார் உயிரிழந்துள்ளதாகவும், மேலும், பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகிவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments