Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவிலிருந்து மீண்டு வா இந்தியா! – சிட்னி பல்கலைகழகத்தில் மூவர்ண கொடி!

Webdunia
ஞாயிறு, 16 மே 2021 (14:50 IST)
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் இந்தியா மீண்டு வர வேண்டி சிட்னி பல்கலைகழகம் மூவர்ண கொடி நிறத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் தினசரி பாதிப்புகள் 3 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ளிட்டவற்றால் பலரும் உயிரிழந்து வரும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன.

இந்நிலையில் இந்தியா கொரோனாவிலிருந்து மீள வேண்டி பல நாடுகளில் இந்திய மூவர்ண கொடி நிறத்தில் ஒளி விளக்குகள் மூலம் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைகழகத்தில் இந்தியா கொரோனாவிலிருந்து மீள வேண்டி மூவர்ண கொடியின் நிறங்களில் அலங்கார விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்த விவகாரம்: சிபிசிஐடி வழக்குப்பதிவு

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான ஈரான் அதிபர் என்ன ஆனார்? 12 மணி நேரமாக மீட்பு பணி..!

இன்று 4 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

8 முறை வாக்களித்த இளைஞர் கைது.. தேர்தல் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments