Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவருக்கு பதில் இவர்..! இந்திய சுதந்திர தின விழாவில் புதிய அதிபர்?

Webdunia
ஞாயிறு, 10 ஜனவரி 2021 (15:49 IST)
இந்திய சுதந்திர விழாவில் போரிஸ் ஜான்சன் கலந்து கொள்ளாத நிலையில் புதிய நாடு ஒன்றின் அதிபர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் சுதந்திர தினம் எதிர்வரும் 26ம் தேதி கோலகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த சுதந்திர விழாவில் கலந்து கொள்ள முன்னதாகவே இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அவர் அதை ஏற்றுக் கொண்டும் இருந்தார். ஆனால் தற்போது இங்கிலாந்தில் வீரியமிக்க கொரோனா வலுவடைந்து வருவதையடுத்து தனது இந்திய பயணத்தை போரிஸ் ஜான்சன் ரத்து செய்துள்ளார்.

இந்நிலையில் வேறு ஒரு நாட்டு அதிபர் இந்த முறை இந்திய சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தென் அமெரிக்க நாட்டில் இருக்கும் குட்டி நாடு சுரினாம். இந்த நாட்டின் அதிபராக இருப்பவர் சந்த்ரிகா பெர்சாத் சந்தோஹி. இவர்தான் இந்த முறை சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ள போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சந்தோஹி இந்திய வம்சாவளியை சேர்ந்த சுரினாம் அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments