Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாங்க கூட்டணி அமைச்சாதான் ஆட்சி.. நாங்க ராசியான கட்சி! – பிரேமலதா விஜயகாந்த்!

Webdunia
ஞாயிறு, 10 ஜனவரி 2021 (15:22 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேமுதிக கூட்டணி வைக்கும் கட்சிதான் ஆட்சியை பிடிக்கும் என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக அரசியல் பணிகளில் களம் இறங்கியுள்ளன. இந்நிலையில் கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளன. அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில் அதிமுகவோடு கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளான தேமுதிக, பாமக போன்றவற்றின் முடிவு குறித்து இன்னும் தெரிய வரவில்லை.

இந்நிலையில் கூட்டணி குறித்து பேசியுள்ள பிரேமலதா விஜயகாந்த் “முதன்முறையாக அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி வைத்தபோது அதிமுக வென்றது. அதேபோல பாஜகவும் தேமுதிகவுடன் கூட்டணி வைத்ததால் இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சியை பிடித்துள்ளது. எதிர்வரும் தேர்தலிலும் தேமுதிகவுடன் கூட்டணி அமைக்கும் கட்சிதான் ஆட்சியமைக்கும்” என பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. 8 வேட்பாளர்கள் வாபஸ்.. எத்தனை பேர் போட்டி?

அமெரிக்காவில் இந்திய இளைஞர் சுட்டுக் கொலை.. வேலை தேடிய நபருக்கு நேர்ந்த சோகம்..!

போலி விளம்பரங்கள் வெளியிட்ட வழக்கு.. பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவுக்கு பிடிவாரண்ட்..!

நாளை சூரியன் மறைவதற்குள் எல்லையில் ஊடுருவல் நிறுத்தப்படும்.. டிரம்ப் சவால்..!

35 பேரை கொலை செய்த நபருக்கு மரண தண்டனை.. இன்று நிறைவேற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments