Publish Date: Thu, 06 Jul 2017 (15:53 IST)
Updated Date: Thu, 06 Jul 2017 (16:02 IST)
சூரியனின் வெப்பத்தால் சூரிய புயல் உருவாகி அது பூமியை தாக்கும் அபாயம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
சூரியனின் மேற்பரப்பில் 6,000 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலை காணப்படுகிறது. இந்நிலையில் சூரியனில் இருந்து உருவாகும் புயல் பூமியைத் தாக்கலாம் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.
சூரியனின் மேற்பரப்பில் குமிழிகள் போன்ற கொந்தளிப்புக்கள் ஏற்பட்டு இருப்பதாகவும், இதனால் சூரியப்புயல் உருவாகலாம் எனவும் கண்டரியப்பட்டுள்ளது.
இவ்வாறு சூரியப்புயல் உருவாகினால் அது பூமியையும் தாக்கும் அபாயம் அதிக அளவில் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.