Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமண விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல்: 30 பேர் பலி

Webdunia
ஞாயிறு, 21 ஆகஸ்ட் 2016 (14:49 IST)
துருக்கியில் திருமண விழாவில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.


 

 
துருக்கி சிரியா எல்லையில் உள்ள காஷியான்டெப் நகரத்தில் நேற்று ஒரு திருமண விழா நடந்தது. அதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மக்கள் அனைவரும் கூடியிருந்த நேரத்தில், தற்கொலை படை பயங்கரவாதி உள்ளே புகுந்து, வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளான்.
 
இந்த தாக்குதலில் 22 பேர் சம்பவ இடத்திலே மரணமடைந்தனர். 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் 100 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
இந்த தாக்குதல் திடீரென்று நடத்தப்பட்டதால், அப்பகுதியில் பெரும் பதட்டமும், பரபப்பும் நிலவி வருகிறது. இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.
 
துருக்கியில் அணமையில்தான் ராணுவ புரட்சி முறியடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தற்போது நடந்த இந்த தாக்குதல் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்