Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யூத வழிபாட்டு தலத்தில் ஆசாமி மர்ம தாக்குதல்! – அமெரிக்காவில் பரபரப்பு!

Webdunia
திங்கள், 30 டிசம்பர் 2019 (08:46 IST)
அமெரிக்காவில் யூத வழிபாட்டு தலத்தில் மர்ம ஆசாமி நடத்திய கத்திக் குத்து தாக்குதலில் பலர் படுகாயமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நியூயார்க் நகரின் அருகே உள்ள ராக்லேண்ட் கவுண்டி பகுதி யூத மக்கள் அதிகமாக வாழ்ந்து வரும் பகுதியாகும். நேற்று முன்தினம் யூத விழாவான ஹனுகா கொண்டாடப்பட்டது. இதற்காக யூத மத குருவின் வீட்டிற்கு சென்று 100க்கும் மேற்பட்ட யூத மக்கள் சென்று பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது திடீரென அங்கு நுழைந்த மர்ம ஆசாமி நீளமான கத்தியை கொண்டு அங்கிருந்த மக்களை தாக்கியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் அலறியடித்து ஓடியுள்ளனர். அவர்களை தாக்கி விட்டு யூத ஆலயத்துக்குள் ஓட அந்த நபர் முயன்றபோது ஆலயத்தின் கதவுகளை அடைத்துள்ளனர்.

சம்பவம் அறிந்து உடனடியாக அங்கு விரைந்த போலீஸார் மர்ம ஆசாமியை கைது செய்துள்ளனர். கத்திக் குத்து சம்பவத்தால் பாதிக்கப்பட்ட 5 பேரை அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

வழிபாட்டுக்கு சென்ற மக்கள் மீது திடீரென நடத்தப்பட்ட இந்த தாக்குதல் நியூயார்க் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இளம் பெண்ணின் கன்னத்தைக் கிள்ளி ஐ லவ் யூ சொன்ன வாலிபர்.. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்..!

சென்னையில் குழாய் மூலம் இயற்கை எரிவாயு: மத்திய அரசு அனுமதி..!

பொய் பாலியல் புகாரால் நடுரோட்டுக்கு வந்த ஆசிரியர்! 7 ஆண்டுகள் கழித்து மன்னிப்பு கேட்ட மாணவி!

கூடுதல் மருத்துவ படிப்பு இடங்களுக்கு தமிழக அரசு விண்ணப்பிக்கவில்லையா? அதிகாரிகள் விளக்கம்..!

சென்னை விமான நிலைய வளாகத்திற்குள் நகர பேருந்து.. அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments