Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய மீனவர்களின் விசைப்படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றம் அனுமதி!

Webdunia
ஞாயிறு, 8 நவம்பர் 2020 (11:33 IST)
கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை எல்லை தாண்டி வந்து மீன் பிடித்த இந்திய மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அந்த படகுகளை அழிக்க அந்நாட்டு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக அவ்வப்போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டும் அவர்களுடைய படகுகள் பறிமுதல் செய்யப்பட்டும் வருவது கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது
 
இந்த நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை 121 இந்த மீனவர்களின் விசைப் படகுகள் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அந்த படகுகளை என்ன செய்வது என்பது குறித்த நீதிமன்ற வழக்கில் தற்போது நீதிமன்றம் ஒரு முடிவுக்கு வந்துள்ளதாகவும் தெரிகிறது
 
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்ததாக 2015 முதல் 2018 வரை பறிமுதல் செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் 121 விசைப்படகுகளை அழிக்க அனுமதி அளிப்பதாக அந்நாட்டு நீதிமன்றம் தெரிவித்து உள்ளது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

பதவியேற்பின்போது பாலஸ்தீனத்தை ஆதரித்து முழக்கம்.. ஒவைசி தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா?

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தலைமறைவு.. என்ன நடந்தது?

வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தடுக்க கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு..!

திமுகவும் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது: முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments