Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலீட்டாளர்களை ஈர்க்க கோல்டன் விசா திட்டம் அறிவித்த இலங்கை!

Webdunia
வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (00:03 IST)
அண்டை நாடாக இலங்கையில் அன்னியச் செலாவணி பற்றாக்குறை உள்ளிட்ட காரங்களால் அ ந் நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. 

இதனால் அத்திவாசியப் பொருட்களின் விலை மற்றும், எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ளது. மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் அரசுக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதிபர் கோத்தபய  ராஜபக்ஷே மற்றும் பிரதமர்  மகிந்த ராஜபக்ஷே பதவியை விட்டு விலக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அவர்கள் பதவி விலக மறுத்துள்ளனர்.

இந்தியவிடம் பல ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ள நிலையில்,  சீனாவிடமும் இலங்கை கடனுதவி கேட்டுள்ளது.  பொருளாதார சரிவில் இருந்து மீட்கும் வகையில், புதிய அறிவிப்பு ஒன்றைய அரசு வெளியிட்டுள்ளது. அதில், இலங்கையில் 1 லட்சம் அமெரிக்க டாலர் முதலீடு செய்தால் கோல்டன் விசா திட்டத்தில் 10 ஆண்டுகள் இங்கு தங்கி தொழில் செய்யலாம் எனவும் ,75 ஆயிரம் அமெரிக்க டாலர் மதிப்புக்கு அடுக்குமாடி கட்டிடம் வாங்கினால் 5 ஆண்டுகள் கோல்டன் விசா என  அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments