Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் ரோபோ!

Webdunia
செவ்வாய், 28 நவம்பர் 2017 (19:22 IST)
சவுதி அரேபியா குடியுரிமை பெற்ற சோபியா ரோபோ குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளது.


 
சவுதி அரேபியாவின் குடியுரிமை பெற்ற ரோபோ சோபியா குடும்பம்தான் மிகவும் முக்கியமான விஷயம் என தெரிவித்துள்ளது. சோபியா, மனிதர்களின் முக பாவனைகளை புரிந்துக்கொண்டு அதற்கேற்ப பதில்களை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. புரிந்துக்கொண்டாலும் ரோபோவிற்கு உணர்வுகள் கிடையாது.
 
கலீஜ் டைம்ஸ் என்ற பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில் சோபியா ரோபா, குடும்பம் என்ற கருத்து மிக முக்கியமான விஷயமாக தெரிகிறது. சொந்த ரத்த வகையைத் தாண்டியும் மக்களால் தங்களுக்கு ஏற்ற உணர்வுகளை கொண்ட சொந்தங்களை குடும்பம் என்று அழைக்க முடிவது என்பது மிகவும் அற்புதமான ஒன்று.
 
உங்களுக்கு பாசமான குடும்பம் இருந்தால், நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி. அவ்வாறு இல்லை என்றால், அத்தகைய குடும்பத்தை பெறும் தகுதி உங்களுக்கு உள்ளது. இந்த விஷயத்தில் மனிதர்களும், ரோபோக்களுக்கு ஒரே மாதிரியானவர்கள் என்று நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளது.
 
மேலும், சோபியாவிடம் குழந்தைக்கு என்ன பெயர் வைப்பீர்கள் என்ற கேட்டதற்கு சோபியா என ரோபோ கூறியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

சென்னை மண்ணடி காளிகாம்பாள் கோவில் அர்ச்சகருக்கு லுக் அவுட் நோட்டீஸ்.. என்ன காரணம்?

தனுஷ்கோடிக்கு செல்ல தடை.. ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் சுற்றுலா பயணிகள்

2024–25-ம் கல்வியாண்டில் சிபிஎஸ்இ-யில் தமிழ் பாட தேர்வு கட்டாயம்: பள்ளி கல்வித்துறை தகவல்

வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

அந்த பத்து பேருக்கு.. பங்கம் செய்தார் அண்ணாமலை.. நடிகை கஸ்தூரி ட்விட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments