Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் தொழிலுக்கு தள்ளப்படும் ரோஹிங்கியா அகதிகள் சிறுமிகள்

Webdunia
வியாழன், 22 மார்ச் 2018 (03:05 IST)
சமீபத்தில் மியான்மர் நாட்டில் உள்ள ரோஹிங்கியா இன முஸ்லீம் மக்கள் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டதால் பெரும்பாலான ரோஹிங்கிய இன மக்கள் வங்கதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்தனர்.

இந்த நிலையில் வங்கதேச அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டிருக்கும் ரோஹிங்கியா சிறுமிகளை பாலியல் தொழிலுக்கு கட்டாயப்படுத்தி அனுப்பி வைக்கப்பட்டுவதாக புகார்கள் எழுந்து வருகின்றன

இதுகுறித்து தனியார் உளவு நிறுவனம் ஒன்று அகதிகள் முகாமுக்கு சென்று திரட்டிய தகவல்கள் திடுக்கிட வைப்பதாக உள்ளது. பெற்றோர்களை இழ்ந்த 10 முதல் 15 வயது சிறுமிகள் பலருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி அழைத்து செல்லும் உள்ளூர் மக்கள் சிலர், அந்த சிறுமிகளை பாலியல் தொழிலுக்கு தள்ளி, லட்சக்கணக்கில் சம்பாதிப்பதாக திடுக்கிடும் தகவலை அந்த உளவு நிறுவனம் கூறியுள்ளது

இதுகுறித்து உடனே வங்கதேச அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த நிறுவனம் வலியுறுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

சஹாரா க்ரூப்ஸை குறிவைத்த Scam 2010 வெப் சிரிஸ்! – வழக்கு தொடர்வோம் என எச்சரிக்கை!

கூட்ட நெரிசலில் இறந்தாரா? கொலையா? செண்ட்ரல் வந்த ரயிலில் அழுகி கிடந்த ஆண் சடலம்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்த விவகாரம்: சிபிசிஐடி வழக்குப்பதிவு

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான ஈரான் அதிபர் என்ன ஆனார்? 12 மணி நேரமாக மீட்பு பணி..!

அடுத்த கட்டுரையில்