Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவை தோலுரித்த இந்திய வம்சாவளி பத்திரிக்கையாளர்! – புலிட்சர் விருது அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 13 ஜூன் 2021 (11:26 IST)
ஆண்டுதோறும் பத்திரிக்கை துறையில் சிறந்து விளங்கும் பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் புலிட்சர் விருது இந்த முறை இந்திய வம்சாவளி பத்திரிக்கையாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்திரிக்கை துறையில் சிறந்த செயல்களை செய்த பத்திரிக்கையாளர்களை கௌரவிக்கும் விதமாக அமெரிக்காவில் புலிட்சர் விருது வழங்கப்படுகிறது. உலகளாவிய செய்திகள், உள்ளூர் செய்திகள், புகைப்படக்காரர் என பல பிரிவுகளில் இந்த புலிட்சர் விருதுகள் வழங்கப்படுகின்றன.

அதில் சிறந்த உலகளாவிய பிரச்சினை குறித்த செயல்பாட்டிற்காக இந்திய வம்சாவளி பத்திரிக்கையாளரான மேகா ராஜகோபாலனுக்கு புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் வாழும் பழங்குடி இன மக்களான உய்குர் பழங்குடிகளை கட்டாய கருத்தடை செய்தது, தொழிலாளர் சட்டத்தை மீறி வேலை வாங்கியது உள்ளிட்டவற்றை ஆதாரங்களுடன் மேகா வெளியிட்ட நிலையில், சீனா மீது ஐ.நா உலகசபை நாடுகள் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளன. அதற்கு சான்றாக மேகாவின் கட்டுரை பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சீனாவின் மனித உரிமை மீறலை தோலுரித்து காட்டிய மேகா ராஜகோபாலனுக்கு புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தெற்கில் இருந்து வடக்கு வரை ஒவ்வொரு குரலும் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும்.! ஸ்டாலினுக்கு ராகுல் போட்ட பதிவு..!!

பதவிக்காக தன்மானத்தை இழந்த திமுக எம்.பி.க்கள்.! ஜெயக்குமார் கடும் விமர்சனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments