Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரியங்கா சோப்ரா குறித்து ஐ.நாவுக்கு பாகிஸ்தான் எழுதிய கடிதம்..

Webdunia
வியாழன், 22 ஆகஸ்ட் 2019 (12:43 IST)
ஐ.நா.வின் நல்லெண்ண தூதராக இருக்கும் நடிகை பிரியங்கா சோப்ரா பதவி விலக வேண்டும் என ஐ.நா.வுக்கு பாகிஸ்தான் கடிதம் எழுதியுள்ளது.

உலகம் முழுவதும் பெண் குழந்தைகளின் கல்வி, நோய் எதிர்ப்பு சக்தி, தேவையான ஊட்டச்சத்துகள், எய்ட்ஸ் நோய் ஆகியவற்றை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் யூனிசெஃப் தொண்டாற்றி வருகிறது. இதன் உலகளாவிய நல்லெண்ணத் தூதராக பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த 2016 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் காஷ்மீரீன் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை பிரியங்கா ஆதரித்தார் என்றும், மேலும் அவர் இந்தியா-பாகிஸ்தானின் இடையே பிரச்சனை எழும்போதெல்லாம் ஒரு தலைபட்சமாகவே செயல்படுகிறார் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆதலால் அவரை நல்லெண்ண தூதர் பதவியில் இருந்து நீக்குமாறு பாகிஸ்தான் மனித உரிமைகள் துறை அமைச்சர் ஷெரின் மசாரி, ஐ.நாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

புல்வாமா தாக்குதலின் போது இந்திய வீரர்களுக்கு ஆதரவாக பிரியங்கா சோப்ரா தனது டிவிட்டர் பக்கத்தில் “ஜெய் ஹிந்த்” என பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ஆரஞ்சு அலெர்ட்..! 3 நாட்களுக்கு நீலகிரிக்கு வராதீங்க! – மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்!

தெரு நாய்களுக்கு சோறு வெச்சது தப்பா? இளம்பெண்ணை கட்டையால் தாக்கிய ஆசாமி!

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments