ஒமிக்ரான் டெல்டா, ஆல்பா போன்று ஆபத்தானது அல்ல..?

Webdunia
செவ்வாய், 7 டிசம்பர் 2021 (12:33 IST)
ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்த விஞ்ஞானிகள் குழுவில் ஒருவரான சாரா கில்பர்ட் ஒமிக்ரான் குறித்து பேசியுள்ளார். 

 
அவர் கூறியதாவது, ஒமிக்ரான் குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தற்போதைய தகவல்களின்படி, இது மிகவும் வேகமாக பரவக் கூடியதாகவும் அதே நேரம் அதிக ஆபத்து இல்லாததாகவும் உள்ளது. ஆனால் கடந்த 2 வாரங்களில் மருத்துவமனையில் சேர்ந்தவர்களில் 80% 50 வயதுக்கு மேற்பட்டவர்கள். 
 
இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு ஆக்சிஜன் தேவைப்படவில்லை. எனவே ஒமிக்ரான் கொரோனா மற்ற உருமாறிய வைரஸ்களான டெல்டா, ஆல்பா போன்று ஆபத்தானது அல்ல. மக்களின்  வாழ்வாதாரம் வைரஸ் அச்சுறுத்தலுக்கு உள்ளாவது இதுவே கடைசியாக இருக்கும் என்று கூறுவதற்கில்லை. எனவே, அடுத்தடுத்த வைரசை எதிர்கொள்ள உலகம் தயாராக உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 
 
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் மெல்ல குறைந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவ தொடங்கியுள்ள ஒமிக்ரான் பாதிப்பு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. தென் ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஒமிக்ரான் தீவிரமாக பரவத் தொடங்கியுள்ள நிலையில் இந்தியாவில் இதுவரை 23 பாதிப்புகள் உறுதியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதை மாறி சென்ற ரேபிடோ பைக் ஓட்டுனர்.. பைக்கில் இருந்து குதித்து தப்பிய இளம்பெண்..!

சாமிய ஊர்வலம் கொண்டு போய் கோவிலுக்குள்ள வைக்கணும்!.. விஜயை கொண்டாடும் ஈரோடு தவெக நிர்வாகிகள்..

டெல்லியில் மெஸ்ஸி.. விராத் கோஹ்லியுடன் கால்பந்து விளையாடுகிறாரா? மோடி, அமித்ஷாவுடன் சந்திப்பு..!

ஆகாஷ் பாஸ்கரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு.. அமலாக்கத்துறை என்ன செய்தது?

மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0.. தேமுதிக தொண்டர்களுக்கு பிரேமலதா அழைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments