Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜப்பானை போட்டுத்தள்ள திட்டமா? வடகொரியா ஏவிய ஏவுகணையால் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 29 ஆகஸ்ட் 2017 (05:16 IST)
ஜப்பான் மீது வடகொரியா ஏவுகணை வீசி சோதனை செய்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளதால் ஜப்பான் தனது நாட்டை பாதுகாக்க மேலும் சில பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருவதாக தெரிகிறது. அமெரிக்காவை பழிவாங்குவதற்கு முன்பே ஜப்பான் மீது வடகொரியா ஏவுகணையை ஏவ முடிவெடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது



 
 
அமெரிக்கா உள்பட உலகின் அனைத்து நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, வடகொரியா ஏவுகணை சோதனைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட சக்தி வாய்ந்து ஹைட்ரஜன் குண்டு சோதனையால், உலக நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளன.
 
இதனால் பொருளாதார தடை உள்பட பல அதிரடி நடவடிக்கைகளை அமெரிக்காவும், ஐநாவும் வடகொரியா மீது எடுத்துள்ள நிலையில் கொரிய தீபகற்பத்தில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க, அமெரிக்காவே நேரடியாக களம் இறங்கியுள்ளது.
 
இந்நிலையில் தான் வடகொரியாவில் உள்ள சுனான் பகுதியில் இருந்து ஏவுகணை ஒன்று சோதனை செய்யப்பட்டது. இந்த ஏவுகணை 1,180 கி.மீ தூரம் கடந்து சென்று பசுபிக் கடலில் விழுந்தது. ஜப்பானின் வான் பகுதியில் இந்த ஏவுகணை சென்றதால், உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த ஜப்பான் பிரதமர் அபே உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ள பிரதமர் அபெ, இதுகுறித்து ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருகிறார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

கனமழை எதிரொலி.. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்..!

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டனரா? ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

பதவியேற்பின்போது பாலஸ்தீனத்தை ஆதரித்து முழக்கம்.. ஒவைசி தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments