Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ட்விட்டரை தடை செய்த நைஜீரியா! “கூ” செயலியில் புதிய கணக்கு!

Webdunia
வெள்ளி, 11 ஜூன் 2021 (11:14 IST)
நைஜீரியாவில் ட்விட்டர் தடை செய்யப்பட்ட நிலையில் நைஜீரிய அரசு இந்திய செயலியான “கூ”வில் புதிய கணக்கை தொடங்கியுள்ளது.

நைஜீரிய அதிபராக இருந்து வரும் முகமது புஹாரிக்கு எதிராக நைஜீரியாவில் மக்கள் புரட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் உள்நாட்டு போர் மூளும் சூழல் உள்ள நிலையில் முன்னர் நடந்த உள்நாட்டு சண்டையை சுட்டிக்காட்டி ட்விட்டரில் அதிபர் முகமது புஹாரி தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதனால் அதிபரின் ட்வீட்டை ட்விட்டர் நிறுவனம் நீக்கியது. இதனால் பதில் நடவடிக்கை எடுத்த நைஜீரிய அரசு ட்விட்டரை நைஜீரியாவில் தடை செய்துள்ளது. இந்நிலையில் தற்போது ட்விட்டருக்கு மாற்றாக நைஜீரிய அரசு, இந்திய செயலியான “கூ” வை பயன்படுத்த தொடங்கியுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கூ செயலியை உருவாக்கியவர்களில் ஒருவராத ராதாகிருஷ்ணன் “கூ” தற்போது இந்தியாவை தாண்டி பறக்க தொடங்கியுள்ளது” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு இன்னொரு அடி.. இந்தியாவின் நட்பு நாடாகிறது ஆப்கானிஸ்தான்..!

அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார்.. இந்தியாவுக்கு அழைப்பு விடுத்த பாகிஸ்தான் பிரதமர்..!

மீண்டும் பரவுகிறதா கொரோனா வைரஸ்? ஹாங்காங், சிங்கப்பூரில் பரபரப்பு..!

டாய்லெட் வெடித்து சிதறியதில் 20 வயது இளைஞர் படுகாயம்.. விசாரணையில் திடுக் தகவல்..!

10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய இரட்டை சகோதரிகளுக்கு ஒரே மதிப்பெண்கள்.. ஆச்சரிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments