Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியா - இலங்கை கிரிக்கெட் போட்டி: கேப்டன் ஆனார் ஷிகர் தவன் !!

இந்தியா - இலங்கை கிரிக்கெட் போட்டி: கேப்டன் ஆனார் ஷிகர் தவன் !!
, வெள்ளி, 11 ஜூன் 2021 (09:16 IST)
இந்தியா - இலங்கை மோதும் கிரிக்கெட் போட்டியின் இந்திய அணி கேப்டனாக ஷிகர் தவான் நியமனம் என அறிவிப்பு. 

 
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தலா மூன்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்திற்கான போட்டி அட்டவனை வெளியிடப்பட்டுள்ளது. 
 
அதன்படி இந்தியா - இலங்கை இடையிலான ஒருநாள் போட்டிகள் ஜூலை 13, 26 மற்றும் 18 தேதிகளில் நடைபெறுகிறது. மேலும் டி20 போட்டிகள் ஜூலை 21, 23 மற்றும் 25 தேதிகளில் நடைபெற இருப்பதாக போட்டிகளை ஒளிபரப்பும் சோனி ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக புவனேஷ்வர் குமார் நியமிக்கப்பட்டுள்ளார் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தென் ஆப்பிரிக்கா vs வெஸ்ட் இண்டீஸ் – இன்று முதல் டெஸ்ட்!