3 மாத கைக்குழந்தையை ரயில்வே ஸ்டேஷனில் விட்டு சென்ற தாய்..! 24 மணி நேரத்தில் கண்டுபிடித்த போலீஸ்..!

Webdunia
வெள்ளி, 5 மே 2023 (13:48 IST)
மூன்று மாத கைக்குழந்தையை ரயில்வே ஸ்டேஷனில் விட்டு சென்ற பெண்ணை 24 மணி நேரத்தில் போலீசார் கண்டுபிடித்து உள்ள சம்பவம் காட்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
காட்பாடி ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் கைக்குழந்தையை மூதாட்டி ஒருவரிடம் ம் விட்டு விட்டு சென்ற சிசிடிவி காட்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த பெண்ணுக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் இருக்கும் நிலையில் நான்காவது ஒரு குழந்தை பிறந்ததாகவும் வறுமை காரணமாக அந்த குழந்தையை வளர்க்க முடியாததால் அந்த குழந்தையை காட்பாடி ரயில் நிலையத்துக்கு வந்து ஒரு மூதாட்டி இடம் கொடுத்துவிட்டு சென்றதாகவும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
 
மூதாட்டி அளித்த புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் 24 மணி நேரத்தில் குழந்தையை விட்டுச் சென்ற பெண்ணையும் அவரது கணவரையும் கண்டுபிடித்தனர் 
 
தற்போது அந்த கைக்குழந்தை குழந்தைகள் நல அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் குழந்தையை விட்டுச் சென்ற பெற்றோர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுவையில் விஜய் - என்ஆர் காங்கிரஸ் கூட்டணியா? உள்துறை அமைச்சர் சந்தேகம்..!

தவெகவில் இணைகிறாரா வைத்திலிங்கம்? தமிழக அரசியலில் பரபரப்பு..!

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments