Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியை பாதியில் நிறுத்திய போலீசார்: என்ன காரணம்.?

Advertiesment
இசை நிகழ்ச்சி
, திங்கள், 1 மே 2023 (18:10 IST)
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் இசை நிகழ்ச்சி புனேவில் நடந்து வந்த நிலையில் திடீரென போலீசார் அந்த இசை நிகழ்ச்சியை நிறுத்தியது பரபரப்பு ஏற்படுத்தியது. 
 
இரவு 10 மணி வரை மட்டுமே ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்ததாகவும் 10 மணிக்கு மேல் இசை நிகழ்ச்சி நடைபெற்றதால் அதை தடுத்து நிறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்றும் புனே போலீசார் தெரிவித்துள்ளனர். 
 
பத்து மணிக்கு மேல் ஏ.ஆர்.ரஹ்மான் பாடலை பாடத் தொடங்கிய போது காவல்துறை அதிகாரி ஒருவர் இசை நிகழ்ச்சியை நிறுத்தும்படி சைகை செய்ததாகவும் ஆனால் அதை கவனிக்காமல் இசை நிகழ்ச்சி தொடர்ந்து நடந்து கொண்டிருந்ததை அடுத்து மேடைக்கு ஏறிய போலீசார் நிறுத்தும்படி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரம்மன் செய்த சாதனை உன்னில் தெரிகிறது.... பால் மேனி அழகில் பசங்களை இழுக்கும் திரிஷா!