Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லைக்ஸ் வராவிட்டால் 15-வது மாடியிலிருந்து குழந்தையை கீழே போட்டு விடுவேன்: மிரட்டிய நபர் கைது

Webdunia
புதன், 21 ஜூன் 2017 (05:54 IST)
ஃபேஸ்புக்கில் அடிமையாக உள்ள பலர் தாங்கள் போடும் பதிவிற்கு லைக் வராவிட்டால் டென்ஷன் ஆகிவிடுவதை பார்த்திருக்கின்றோம். ஆனால் அல்ஜீரியா நாட்டை சேர்ந்த ஒருவர் தான் போட்ட பதிவிற்கு 1000 லைக்ஸ் வரவில்லை எனில் ஐந்து மாத குழந்தையை 15வது மாடியில் இருந்து கிழே போட்டு கொன்றுவிடுவேன் என்று மிரட்டி ஒரு பதிவு போட்டுள்ளார்.



 


அல்ஜீரியா நாட்டிடில் அடுக்கு மாடிக் குடியிருப்பின் 15-ஆவது மாடியில் தங்கியிருக்கும் ஒருவர் ஃபேஸ்புக்கில் ஒரு பதிவை பதிவு செய்துவிட்டு பின்னர் தனது பதிவிற்கு 1000 லைக்ஸ் வரவில்லை என்றால் குழந்தை கொன்றுவிடுவேன் என்று பதிவு செய்ததோடு ஜன்னல் வழியாக ஒரு குழந்தையை தூக்கிப்பிடித்தபடியான போட்டோவையும் பதிவு செய்துள்ளார்.

இந்த பதிவால் அதிர்ச்சி அடைந்த பலர் அவரது பதிவிற்கு லைக் போட்டனர். இந்நிலையில் இதுகுறித்து தானாகவே முன்வந்து வழக்குப்பதிவு செய்த அல்ஜீரியா போலீசார் மிரட்டிய நபரை கைது செய்தனர். அவர் மீது குழந்தையின் பாதுகாப்புக்கு பாதிப்பு உண்டாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments