Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இடி மின்னல் தாக்கி 323 மான்கள் பலி

Advertiesment
இடி மின்னல் தாக்கி 323 மான்கள் பலி
, செவ்வாய், 30 ஆகஸ்ட் 2016 (12:25 IST)
நார்வே நாட்டில் உள்ள மலைப்பகுதியில் இடி மின்னல் தாக்கியதில் 323 மான்கள் உயிரிழந்தது.


 

 
நார்வே நாட்டின் தெற்கு திசையில் உள்ள ஹர்டாங்கர் மலை பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இடியுடன் கூடிய மழை பெய்தது. அதில் மின்னல் தாக்கி அங்குள்ள காட்டு மான்கள் உயிரிழந்தன. 
 
இச்செய்தி நேற்று காலை நார்வே பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது. காட்டு மான்கள் ஒன்றின் மேல் ஒன்றாக, கொம்புகள் சிக்கிக்கொண்ட நிலையில் இறந்து கிடந்துள்ளன.
 
பலத்த மழை பெய்ததில் புயலும் வீசியுள்ளது. அதோடு மின்னல் தாக்கியதில்தான் மான்கள் உயிரிழந்ததாக அந்நாட்டின் இயற்கை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.   

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நம்புங்கப்பா.....8,000 ரூபாய் போன் ரூ.501க்கு