இந்தியவம்சாவளியைச்சேர்ந்தவரும்அதிபர் ட்ரம்ப்பைக் கடுமையாக விமர்சிப்பவருமான கமலாஹாரிஸ் 2020-ம்ஆண்டுக்கானஅதிபர்தேர்தலுக்கானபிரச்சாரத்தைத்தொடங்கினார்.
இந்தியாவைச் சேர்ந்த சியாமளா கோபாலன் மற்றும் ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த ஆகியோருக்குப் பிறந்த கமலா ஹாரிஸ் 2020 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பாகப் போட்டியிட இருக்கிறார். அதற்கானத் தேர்தல் பிரச்சாரத்தை நேற்று முன் தினம் தனது சொந்த மாகாணமான ஓக்லாந்தில் தொடங்கியுள்ளார். கமலா ஹாரிஸ் முதல் ஆப்பிரிக்க - இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் கலிஃபோர்னியா அட்டர்னி ஜெனரலாக இப்போது பணியாற்றிக்கொண்டிருக்கிறார்.
ஓக்லாந்து சிட்டி ஹாலில் சுமார் 20 ஆயிரம் பேர் பேசிய கமலா ஹாரிஸ் ‘என்னுடைய தாய் சியாமளா அடிக்கடி சொல்வார். 'வெறுமனே உட்கார்ந்து எல்லாவற்றைப் பற்றியும் புகார் சொல்லிக் கொண்டிருக்காதே; எதையாவது இறங்கி செய். நான் 30 ஆண்டுகளுக்கு முன்னால் அரசு வழக்கறிஞராக எனது பணியைத் தொடங்கியபோது உறுதிமொழியாக ஐந்து வார்த்தைகளை உச்சரித்தேன். அந்த வார்த்தைகளே என்னுடைய வாழ்க்கையை வழிநடத்துகின்றன. அந்த உறுதிமொழி கமலா ஹாரிஸ்.. பார் பீப்புள் (கமலா ஹாரிஸ்…மக்களுக்காக).’ எனக் கூறினார்.
தற்போது அமெரிக்கர்கள் அனைவரும் மாற்றத்துக்கான புள்ளியில் இருப்பதாகவும் ஜனநாயகம் முன்னெப்போதும் இல்லாத அளவில் அச்சுறுத்தலில் இருப்பதாகவும் டிரம்ப் ஆட்சியைக் குற்றம் சாட்டினார்.
ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!
மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!
மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!
பாமக - நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்படும்போது காங்கிரஸ் பேரியக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாதா..? தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை!
திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.! சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருப்பு..!!