காத்திரு பகையே..! நாங்கள் உங்களை வேட்டையாடுவோம்!? – ஜோ பைடன் ஆரூடம்!

Webdunia
புதன், 1 செப்டம்பர் 2021 (10:05 IST)
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேரி இருந்தாலும் அமெரிக்கர்கள் மீது தாக்குதல் நடந்தால் பதிலடி கொடுப்போம் என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் முழுவதும் திரும்ப பெறப்பட்ட நிலையில் தாலிபான்கள் நாட்டை கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியது குறித்து பேசியுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் “ஆப்கானிஸ்தானிலிருந்து லட்சக்கணக்கான மக்களை அமெரிக்க படைகள் வெளியேற்றியுள்ளது. போர் நோக்கத்தினால் அல்ல கருணையின் நோக்கத்தில்.. வரலாற்றில் அமெரிக்கா மட்டுமே இதை செய்துள்ளது.

அமெரிக்க மக்களுக்கு நான் வாக்களித்தபடி ஆப்கானிஸ்தான் போரை முடிவுக்கு கொண்டு வந்துள்ளேன். அதேசமயம் அமெரிக்காவுக்கும், அமெரிக்க நட்பு நாடுகளுக்கும் தீங்கிழைக்கவும் நாங்கள் விடமாட்டோம். நாங்கள் மன்னிக்க மாட்டோம், மறக்க மாட்டோம். நாங்கள் உங்களை வேட்டையாடுவோம், நீங்கள் இறுதி விலையை செலுத்துவீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments