Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புலம்பெயர் மக்களின் ஒரே நம்பிக்கை கமலா ஹாரிஸ்; ட்ரம்பை வெளுத்துவிட்ட ஜோ பிடன்!

Webdunia
சனி, 22 ஆகஸ்ட் 2020 (08:38 IST)
அமெரிக்க தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில் ஜோ பிடன், ட்ரம்ப் இடையேயான வார்த்தை மோதல்கள் அதிகரித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பாக இரண்டாவது முறையாக ட்ரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பிடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் பிரச்சாரங்கல் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்கு பிறகு மக்களிடையே உரையாற்றிய ஜோ பிடன் ”அமெரிக்காவை அனைவரும் இணைந்து மறுகட்டமைப்பு செய்ய வேண்டிய காலம் வந்துவிட்டது. அமெரிக்காவின் இருண்ட காலம் விரைவில் முடிவடைய உள்ளது. கறுப்பின பெண்கள், அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களின் குரலாக கமலா ஹாரிஸ் மாறியுள்ளார்” என கூறியுள்ளார்.

மேலும் கொரோனா தடுப்பு பணிகள், சுற்றுசூழல் சீர்கேடு, பொருளாதார பாதிப்பு போன்றவற்றில் ட்ரம்ப் மேற்கொள்ளாமல் விட்ட பணிகளை தான் மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

36 நிமிடங்களில் கேதார்நாத் பயணம்: புதிய ரோப் கார் திட்டத்திற்க்கு அனுமதி..!

மனைவிக்கு பதிலாக கவுன்சிலராக கணவர்கள். பதவியேற்பில் நடந்த கேலிக்கூத்து..!

நெல்லை பஸ் ஸ்டாண்ட் பிளாட்பாரத்தில் கட்டுகட்டாக பணம்.. அதன்பின் நடந்த ட்விஸ்ட்..!

ஏற்காடு மலைப்பாதை பயணத்திற்கு திடீர் தடை.. காவல்துறையினர் அதிரடி..!

சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே 16 மின்சார ரயில்கள் ரத்து.. எந்தெந்த தேதிகளில் ?

அடுத்த கட்டுரையில்
Show comments