Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடு: ஜப்பான் அரசு அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 27 டிசம்பர் 2022 (20:17 IST)
சீனாவில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு ஜப்பான் அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாக வருவதை அடுத்து சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு உலகின் பல்வேறு நாடுகள் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. 
 
இந்த நிலையில் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. வரும் வெள்ளிக்கிழமை முதல் சீனாவிலிருந்து வரும் அனைத்து பயணிகளும் கொரோனா சோதனை செய்யப் படுவார்கள் என்றும் கொரோனா அறிகுறி அல்லது உறுதி செய்யப்பட்டால் விமான நிலையத்திலேயே அந்த நபர் தனிமைப்படுத்தப் படுவார் என்றும் ஜப்பான் பிரதமர் தெரிவித்துள்ளார்
 
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கொரோனா பரவல் அதிகரிப்பதை தடுக்கவே இந்த நடவடிக்கை என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments