Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலநடுக்கம், எரிமலை அடுத்து சுனாமியா?

Webdunia
சனி, 25 மே 2019 (15:01 IST)
இந்தோனேஷியா சமீப மாதங்களில் தொடர்ச்சியாக பல பேரிடர்களை சந்தித்து வருகிறது. கடந்த வாரங்களில் தொடர்ந்து இரண்டு நிலநடுக்கங்கள் இந்தோனேசிய பகுதிகளில் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் குறைவான நிலநடுக்கங்களே என்றாலும் இந்தோனேசிய பகுதிகளில் அது பதட்டத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் சுற்றுலா பகுதியான பாலியில் ஆகங் எரிமலை மீண்டும் வெடிக்க தொடங்கியிருப்பது அழிவுக்கான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து நிலநடுக்கம், எரிமலை சீற்றம் போன்றவை ஏற்படுவதால் சுனாமி ஏற்பட ஏதாவது வாய்ப்பிருக்குமோ என மக்கள் அச்சப்படுகின்றனர். இந்த பேரிடர் சம்பவம் உலகம் முழுவதையுமே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. சுமத்ரா தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் விளைவுதான் 2004ல் இந்திய கடலோர பகுதிகள் சுனாமியை சந்தித்தது.
தற்போது இந்தோனேசியாவில் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று கொண்டிருப்பதுடன், மக்களும் எரிமலையின் பாதிப்புக்கு உள்ளாகாத பகுதியில் பத்திரமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

நாளை பெளர்ணமி.! திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.!

இரவு 10 மணி வரை 34 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கைகளால் மனிதக் கழிவை அகற்றும் ஊழியர்.! மாநகராட்சி மீது நடவடிக்கை பாயுமா.?

ராஜேஷ் தாஸ் மீது மனைவி புகார்.! கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு..!!

நடுவானில் குலுங்கிய விமானம்..! பயணி ஒருவர் உயிரிழந்த பரிதாபம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments