Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ. 4,000 க்கு வாங்கிய நாற்காலியை ரூ. 82 லட்சத்திற்கு விற்ற பிரபலம்!

Webdunia
செவ்வாய், 13 ஜூன் 2023 (22:14 IST)
அமெரிக்க நாட்டைச் சேர்ந்த டிக்டாக் பிரபலம் ஒருவர்  4 ஆயிரத்திற்கு வாங்கிய ஒரு நாற்காலியை 82 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளார்.

அமெரிக்க நாட்டின் லாஸ் ஏஞ்சல்ஸ் என்ற நகரில் வசிப்பவர். ஜஸ்டின் மில்லர். இவர் டிக்டாக் பிரபலம் ஆவார்.

இவருக்குப் பழமையான பொருட்களின் மீது ஆர்வம் உள்ளதால் அதை தேடிச் சேகரித்து வருவதுடன் அதைப் பற்றி அறிந்து கொண்டு வருகிறார்.

சமீபத்தில், பேஸ்புக் மார்க்கெட்டில் ஒரு பழமையாக  நாற்காலியைப் பார்த்து அதை இந்திய மதிப்பில் ரூ 4 ஆயிரத்திற்கு வாங்கியுள்ளார். (அமெரிக்க டாலரில் 50 டாலர்.

அதன்பின்னர், அந்த நாற்காலியை சீரமைக்க மட்டும் ரூ.2.5 லட்சம் செலவு செய்துள்ளார். இதையடுத்து, பழம் பொருட்களை விற்பனை செய்யும் ஒரு  நிறுவனத்திற்கு இதைக் கொண்டு சென்றார்.

இந்த நாற்காலிக்கு ஏற்பட்ட கிராக்கியால், இந்திய மதிப்பில் ரூ.82 லட்சத்திற்கு விற்கப்பட்டது.

இதனால் ஜஸ்டின் மில்லர் மகிழ்ச்சி அடைந்துள்ளார். இதுபற்றி வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மாணவிகளுக்கு தொடரும் பாலியல் தொல்லை! - நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் கைது!

இன்று மீண்டும் தங்கம் விலை உயர்வு.. ஒரு கிராம் ரூ.8000ஐ நெருங்கியது..!

வேகமாக பரவி வரும் ஜிபிஎஸ் நோய்.. 2 கிராமங்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை..!

எலான் மஸ்கிற்கு கூடுதல் அதிகாரம்: டிரம்பை கண்டித்து அமெரிக்காவில் திடீர் போராட்டம்..!

பனியில் சறுக்கி தலைக்குப்புற கவிழ்ந்த விமானம்! பயணிகள் நிலை என்ன? - கனடாவில் அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments