Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”உலகம் பெரும் ஆபத்தை எதிர்கொள்ளும்”..இம்ரான் கான் எச்சரிக்கை

Webdunia
செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (08:47 IST)
இரு நாடுகளும் அணு ஆயுதங்களை கொண்டிருப்பதால், போர் வந்தால் உலகம் ஆபத்தை எதிர்கொள்ளும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எச்சரித்துள்ளார்.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. காஷ்மீர் குறித்த இந்தியாவின் நடவடிக்கைகளை உலக நாடுகள் தடுக்கவில்லை என்றால் இரு நாடுகளும், ராணூவ நடவடிக்கையை நோக்கி தள்ளப்படுவர் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் தற்போது இது குறித்து ஒரு நிகழ்ச்சியில் கருத்து தெரிவித்த அவர், ”இந்தியாவிற்கு நான் கூற விரும்புவது என்னவென்றால், எந்த பிரச்சனைக்கும் போர் ஒரு தீர்வாகாது. போர் புதிய பிரச்சனைகளுக்கு தான் வழிவகுக்கும்.” என கூறியுள்ளார். மேலும் அவர், “நாங்கள் இந்தியாவுடன் ஒரு போதும் போரை தொடங்கமாட்டோம், இரு நாடுகளும் அணு ஆயுதங்களை கொண்டிருப்பதால் போர் வந்தால் உலகம் பெரும் ஆபத்தை எதிர்கொள்ளும்” எனவும் எச்சரித்துள்ளார்.

இதனிடையே நேற்று பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது செய்தியாளர்களை சந்தித்த போது, பாகிஸ்தானிடம் 250 கிராம் எடை கொண்ட அணுகுண்டுகள் தயாராக உள்ளன. பாகிஸ்தானுடன் இந்தியா மோதினால், இந்தியா 22 கூறுகளாக உடையும் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments