தேசிய குடிமக்கள் பதிவேட்டில் ராணுவ வீரர்களின் பெயர்களும் இல்லையா? அதிர்ச்சி தகவல்!

Webdunia
செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (08:32 IST)
அஸ்ஸாம் மாநிலத்தில் சமீபத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் அஸ்ஸாம் மாநிலத்தில் இருக்கும் லட்சக்கணக்கானோர் பெயர் இல்லாத நிலையில் கார்கில் போரின்போது இந்தியாவுக்காக போரிட்ட 20 ராணுவ வீரர்களின் பெயரும் இல்லை என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
அஸ்ஸாம் மாநிலத்தில் குடியேறிய வெளிநாட்டினரை கண்டுபிடித்து அடையாளம் காண்பதற்காக தேசிய குடிமக்கள் பதிவேடு உருவாக்கப்பட்டது. இந்த பதிவேடுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையிலும், பல்வேறு நடைமுறைச் சிக்கல்களுக்கு இடையே சமீபத்தில் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதிப் பட்டியல் வெளியானது. இந்தப் பட்டியலில் சுமார் 19 லட்சம் பேர் இடம் பெறவில்லை என்பது ஐநாவுக்கே அதிர்ச்சி தரும் செய்தியாக உள்ளது. 
 
இந்த நிலையில் அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து, இந்திய ராணுவத்தில் பணியாற்றிய 20 பேர்களின் பெயர்  தேசிய குடிமக்கள் பதிவே விடுபட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. கார்கில் போரின்போது பணியாற்றிய இந்த 20 ராணுவ வீரர்களும் பார்பெடா மாவட்டத்தில் உள்ள சருகாரித் என்ற இடத்தில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ராணுவ வீரர்களின் பெயர்கள் மட்டுமின்றி முன்னாள் குடியரசுத் தலைவர் பக்ருதின் அலி அகமதுவின் குடும்பத்தினர் பெயரும் இந்த பட்டியலில் இல்லை என்ற செய்தி இந்த பட்டியலையே கேள்விக்குறி ஆக்கியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments