Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணம் செய்தால் கடன், குழந்தை பெற்றால் கடன் ரத்து: வித்தியாசமான அறிவிப்பு

Webdunia
வியாழன், 14 பிப்ரவரி 2019 (19:29 IST)
இந்தியா, சீனா போன்ற நாடுகளில் மக்கள் தொகையை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் ஹங்கேரி நாட்டில் மக்கள் தொகை குறைந்து கொண்டே வருவதால் மக்கள் தொகையை அதிகரிக்க அந்நாட்டு அரசு புதிய சலுகையை அறிவித்துள்ளது.

இதன்படி திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளுக்கு ரூ.25 லட்சம் அரசு கடன் வழங்கப்படும் என்றும் அந்த தம்பதிகள் மூன்று குழந்தைகள் பெற்றுக்கொண்டால் அந்த கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் என்றும் ஹங்கேரி நாட்டின் பிரதமர் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் திருமணம் செய்து  4 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களுக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஹங்கேரி பிரதமரின் இந்த அறிவிப்பால் வரும் ஆண்டுகளில் அந்நாட்டின் மக்கள் தொகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 1980ஆம் ஆண்டில் இருந்து அந்நாட்டின் மக்கள் தொகை ஆண்டு ஒன்றுக்கு 28 ஆயிரம் குறைந்து வருவதாகவும், இதனை தடுக்கவே இந்த அதிரடி அறிவிப்பு என்றும் ஹங்கேரி அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments