Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போச்சா... போச்சா... பிஎஸ்என்எல் நெட்வொர்க்கும் போச்சா... மொத்தமா சாய்த்த ஜியோ!!

Webdunia
வியாழன், 14 பிப்ரவரி 2019 (19:02 IST)
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ தொலைத்தொடர்பு துறையில் வருகை தந்ததற்கு பிறகு பெரும் நஷ்டத்தை சந்தித்து வரும் மற்ற நெட்வொர்க் நிறுவனங்களுல் பிஎஸ்என்எல் நிறுவனமும் ஒன்று. 
 
இந்நிலையில், பிஎஸ்என்எல் விரைவில் மூடப்படவுள்ளதாக பரபரப்பு தகவல் கிளம்பியுள்ளது. பொதுத்துறை நெட்வொர்க் நிறுவனமான பிஎஸ்என்எல் விரைவில் தனியார் மயமாக்கப்படலாம் என்ற தகவலும் சில காலங்களாகவே இருந்து வருகிறது. 
 
பிஎஸ்என்எல் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாகவே தொடர் நஷ்டத்தில் இயங்கி வருவதாக கூறப்படுகிறது. 2016 - 17ஆம் ஆண்டில் இந்நிறுவனம் ரூ.4,793 கோடி இழப்பை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, ஜியோ அறிமுகமான காலக்கட்டம் அது. 
மொபைல், லேண்ட்லைன், பிராட்பேண்ட் என அனைத்து சேவைகளை வழங்கினாலும் வாடிக்கையாளர்களுக்கு இன்னும் 2ஜி/3ஜி சேவைகளையே வழங்கி வருகிறது. மற்ற நிறுவனங்கள் 4ஜி அடுத்து 5ஜி என சென்றுக்கொண்டிருக்கும் போது பிஎஸ்என்எல் 3ஜி-யை வைத்து போட்டியை சமாளிக்க முடியவில்லை. 
 
இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனத்தை மூடுவது, அல்லது புதுப்பிப்பது மற்றும் அது தொடர்பான அனைத்து ஆய்வுகளையும் மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 
 
இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் பிஎஸ்என்எல் நிறுவனத்தை மூடினால் என்ன ஆகும்? என்று அறிக்கை அளிக்குமாறு அரசு பிஎஸ்என்எல் அதிகாரிகளிடம் கேட்டுள்ளதாம். இந்த செய்தி பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களை கலக்கமடைய செய்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments