Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை அதிபராகிறார் ராஜபக்‌ஷே..

Arun Prasath
ஞாயிறு, 17 நவம்பர் 2019 (11:21 IST)
இலங்கை அதிபர் தேர்தலில் தனது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார் புதிய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச

இலங்கை அதிபர் தேர்த்லின் வாக்குகள் எண்ணப்பட்டு கொண்டிருந்த வேளையில் பொதுஜன முன்னணி கட்சியின் வேட்பாளர் கோத்தப்பய ராஜபக்‌ஷே, தன்னை எதிர்த்து போட்டியிட்ட புதிய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை விட 37,000 க்கும் அதிகமான வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார்.

இந்நிலையில் தற்போது தனது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார் சஜித். மேலும் மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.

இதன் மூலம் கோத்தப்பய ராஜபக்‌ஷே இலங்கையின் அதிபராகிறார். மேலும் தனது வெற்றியை அமைதியாக கொண்டாடுமாறு தனது கட்சி தொண்டர்களுக்கு கோத்தப்பய ராஜபக்‌ஷே அறிவுறுத்தியுள்ளார்.

வெற்றிக்கு 50% வாக்குகள் இருந்த பெற வேண்டும் என இருந்த நிலையில், கோத்தப்பய ராஜபக்‌ஷே 50% வாக்குகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments