Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகளாவிய உணவு நெருக்கடி; ஐரோப்பாதான் காரணம்! – ரஷ்ய அதிபர் பகீர் குற்றச்சாட்டு!

Webdunia
சனி, 4 ஜூன் 2022 (08:42 IST)
ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளதால் உணவு தட்டுப்பாடு ஏற்படுவதாக கூறப்படும் புகாரை ரஷ்ய அதிபர் புதின் மறுத்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் 100 நாட்களை தாண்டியும் தொடர்ந்து இந்த போர் நடந்து வருகிறது. இதனால் உக்ரைனிலிருந்து சமையல் எண்ணெய், எரிபொருள் ஏற்றுமதி என வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் உலக அளவில் சில சூரியகாந்தி எண்ணெய் உள்ளிட்ட பல உணவுப்பொருட்களின் தேவை அதிகமாக இருந்தாலும், ஏற்றுமதி குறைவாக உள்ளதால் விலை வேகமாக உயர்ந்துள்ளது. உணவு பொருட்கள் நெருக்கடி ஏற்பட்டதற்கு ரஷ்யாவே காரணம் என ஐரோப்பிய நாடுகள் மறைமுகமாக பேசி வருகின்றன.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் “உலகளாவிய உணவு சந்தையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளையும், அது சார்ந்த பிரச்சினைகளையும் மேற்குலக நாடுகள் ரஷ்யாவின் மீது திருப்பி விடுகின்றன. ரஷ்யா மீது அவர்கள் விதித்துள்ள பொருளாதார தடைகள்தான் உலக சந்தையை மோசமாக்கியுள்ளது.

உக்ரைனிலிருந்து உணவு பொருட்கள் ஏற்றுமதி செய்வதை ரஷ்யா தடுக்கவில்லை. உக்ரைனிலிருந்து உணவு பொருட்கள் ஏற்றுமதி செய்யும் கப்பல்களுக்கு பாதுகாப்பான பாதையை வழங்கும் என ரஷ்யா உறுதி அளிக்கிறது” என பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய அணிக்கு நாடாளுமன்றத்தில் வாழ்த்து..! இந்தியா- இந்தியா என முழக்கமிட்ட எம்பிக்கள்..!!

டெட்ரா பாக்கெட்டுகளில் 90 மி.லி. மது விற்க திட்டமா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!

செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் புதிதாக 3 மனுக்கள் தாக்கல்.. என்ன கோரிக்கை?

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்..! ஊரக வளர்ச்சி துறைக்கு மாற்றப்பட்ட ககன்தீப் சிங் பேடி..!!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு..! 11 பேருக்கு 3 நாட்கள் சிபிசிஐடி காவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments