ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

Mahendran
சனி, 29 மார்ச் 2025 (13:50 IST)
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, உலகின் தலைசிறந்த சமூக ஊடகத் தளங்களில் ஒன்றாக இருந்த டிவிட்டரை, பிரபல தொழிலதிபரும், ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லாவின் உரிமையாளருமான எலான் மஸ்க் வாங்கினார். பின்னர், அவர் அதன் பெயரை "எக்ஸ்" என மாற்றி, பல உயர்நிலையான ஊழியர்களை நீக்கி, அந்த தளத்தின் செயல்பாடுகளில் பல முக்கியமான மாற்றங்களை மேற்கொண்டார்.
 
இந்நிலையில், எலான் மஸ்க் தனது "எக்ஸ்" நிறுவனத்தை ரூ. 2.82 லட்சம் கோடிக்கு விற்பனை செய்துள்ளார். ஆனால் இது வெளி நிறுவனத்திற்கு அல்ல; மாறாக, அவரே உருவாக்கிய X AI நிறுவனத்திற்கே இந்த விற்பனை செய்யப்பட்டுள்ளது. X AI நிறுவனம் செயற்கை நுண்ணறிவில் (AI) மையமாக செயல்பட்டு வருகிறது.
 
அதன்முன், "எக்ஸ்" தளத்தில், X AI உருவாக்கிய 'குரோக் 3' (Grok 3 AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு சாட்பாட் அறிமுகமானது. அது பயன்படுத்துபவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments