Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போதைப்பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை: அண்டை நாடு அதிரடி அறிவிப்பு

Webdunia
வியாழன், 24 நவம்பர் 2022 (14:45 IST)
போதைப்பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை என இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்று அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
உலகம் முழுவதும் போதை பொருள் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் போதைப்பொருளை தடுப்பதற்கு உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கை ஐந்து கிராமிற்கு அதிகமாக போதை பொருள் வைத்திருந்தால் அல்லது விற்பனையில் ஈடுபட்டால் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கக்கூடிய வகையில் சட்டத் திருத்தம் செய்துள்ளது 
 
இதன்படி போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வாய்ப்புள்ளதாக அந்நாட்டு சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் வைத்திருப்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதால் அந்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

நாளை பெளர்ணமி.! திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.!

இரவு 10 மணி வரை 34 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கைகளால் மனிதக் கழிவை அகற்றும் ஊழியர்.! மாநகராட்சி மீது நடவடிக்கை பாயுமா.?

ராஜேஷ் தாஸ் மீது மனைவி புகார்.! கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு..!!

நடுவானில் குலுங்கிய விமானம்..! பயணி ஒருவர் உயிரிழந்த பரிதாபம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments