Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லேண்டர் விக்ரமை அதிகம் எதிர்நோக்கும் பாகிஸ்தானியர்! காரணம் என்ன?

Webdunia
செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (10:27 IST)
இந்தியர்களை விட பாகிஸ்தானியர்கள்தான் லேண்டர் விக்ரம் குறித்து கூகுளில் அதிகம் தேடிப்பார்த்துள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக, ஆர்பிட்டர், விக்ரம் லேண்டர், ப்ரக்யான் ஆகிய 3 பகுதிகளை உள்ளடக்கிய சந்திரயான் 2 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியது. ஆர்பிட்டரில் இருந்து விக்ரம் லேண்டர் பிரிந்தது நிலவில் தரையிறங்கும் போது தகவல் தொடர்பை இழந்தது. 
 
இதன் பின்னர் ஆர்பிட்டர் மூலம் லேண்டர் விக்ரம் சேதமின்றி பத்திரமாக இருப்பதாக தகவலை தெரிந்துக்கொண்டது. ஆனால், லேண்டர் விக்ரமுடன் தொடர்ப்புக்கொள்ள இயலவில்லை என இஸ்ரோ அறிவித்தது. 
அதன் பின்னர் நாசா, இஸ்ரோவுடன் இணைந்து லேண்டர் விக்ரமுடன் தொடர்ப்பை எற்படுத்த முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று நாசா லேண்டர் விக்ரமின் புகைப்படத்தை  வெளியிடவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
 
இதனோடு வெளியாகியுள்ள சிறப்பு செய்தி என்னெவெனில், இந்தியர்களை போல பாகிஸ்தானியர்களும் லேண்டர் விக்ரம் குறித்து கூகுளில் தேடியுள்ளனர். இதில் சுவாரஸ்யம் என்னவெனில், இந்தியர்களை விட பாகிஸ்தானியகளே லேண்டர் விகரம் குறித்து அதிகம் தேடி பார்த்துள்ளனர். 
லேண்டர் விக்ரம் தனது தொடர்பை இழந்த போது பாகிஸ்தான் #IndiaFails என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கியது. ஒருவேளை இந்தியாவை அவமானப்படுத்த லேண்டர் குறித்த தகவலை தேடியதா என தெரியவில்லை. 

தொடர்புடைய செய்திகள்

இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை!

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்.! கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது..!!

இதயம் நின்ற சிறுவனின் உயிரை காப்பாற்றிய பெண் மருத்துவர்.. குவியும் பாராட்டுக்கள்..!

மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் உல்லாச குளியல் ஆடும் சிறுவர்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments